×

பணகுடி அருகே முன்விரோதத்தில் வாலிபரை மிரட்டிய 2 பேர் கைது

பணகுடி, ஜன. 19: பணகுடி அருகே முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். பணகுடி அருகே நதிப்பாறை, ரோஸ்மியாபுரம், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் மால்ராஜ் (24). இவரது நண்பர் ஒருவருக்கும், பணகுடி, அண்ணாநகரை சேர்ந்த செந்தில்குமார் (38), பணகுடி, தளவாய்புரம் மெயின் ரோடு, கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார் (26) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மால்ராஜ் தளவாய்புரம் மெயின் ரோடு அருகே தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த செந்தில்குமார், மனோஜ்குமார், மேலும் ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதோடு ஆயுதத்தால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினராம். மேலும் மிரட்டல் விடுத்து சென்றனராம். பின்னர் இதுகுறித்து மால்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பணகுடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அஜிகுமார், மிரட்டல் விடுத்த செந்தில்குமார், மனோஜ்குமார் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

The post பணகுடி அருகே முன்விரோதத்தில் வாலிபரை மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Panagudi ,Malraj ,North Street, Rosmiyapuram, Nadipara ,Senthilkumar ,Anna Nagar ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...